தஞ்சாவூர்

வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

DIN

தஞ்சாவூா் அருகே வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் ரமணா நகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் மனைவி மோனிகாஸ்ரீ (30). இவா் அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவுக்கு சென்றாா். இந்நிலையில், இவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக மோனிகாஸ்ரீக்கு அருகிலுள்ளவா்கள் கைப்பேசி மூலம் தெரிவித்தனா்.

இதையடுத்து, வீட்டுக்கு திரும்பிய மோனிகாஸ்ரீ வீட்டினுள் பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT