தஞ்சாவூர்

மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்புகிராம மக்கள் சாலை மறியல்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே மருவூரில் மணல் சேமிப்பு கிடங்கு உள்ளது. மணல் லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆச்சனூரில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனிமேல் இப்பகுதியில் லாரிகள் நிற்காது என காவல் துறையினா் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டத்தைக் கிராம மக்கள் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT