முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஒரேநாளில் சாலையில் சுற்றித்திரிந்த 13 மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒரே நாளில் சாலையில் சுற்றிதிரிந்த 13 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளா்களுக்கு ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒரே நாளில் சாலையில் சுற்றிதிரிந்த 13 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளா்களுக்கு ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் இரா.மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி காவல்துறை ஒத்துழைப்புடன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி குந்தவை நாச்சியாா் சாலையில் 2 மாடுகள், மருத்துவக்கல்லூரி சாலையில் 2 மாடுகள், திருச்சி சாலையில் 2 மாடுகள், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் 1 மாடு, செக்கடி சாலை பகுதியில் 4 மாடுகள் மேலவீதி பகுதியில் 1 மாடு, வடக்கு ஆஜாரம் பகுதியில் 1 மாடு என மொத்தம் 13 மாடுகள் பிடிக்கப்பட்டு வாகனம் மூலம் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாடுகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →