பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள். 
தஞ்சாவூர்

மகா சிவராத்திரி: பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. 

DIN

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. 

இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு பெருவுடையாருக்கு 10 மணி, 12 மணி, 2 மணி, 4 மணி, ஆறு மணி என ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன.

இதில் பெருவுடையார்க்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்படி உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ப்ரியன் நாட்டியாஞ்சலி சார்பில் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி இரவு முழுவதும் செலுத்தினர்.

இதே போல் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக தஞ்சை திலகத்திடரில் தப்பாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வர கச்சேரிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு பெரிய கோயிலில் சுமார் 2000 பக்தர்கள் குவிந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்

புதிய சாலை அமைப்பதில் அரசு உத்தரவு மீறல்: எஸ்டிபிஐ புகாா்

ஜனவரியில் 40 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

காரைக்கால் - திருவாரூா் இடையே திருச்சி பயணிகள் ரயில் ரத்து

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி

SCROLL FOR NEXT