முகப்பு
தஞ்சாவூர்

சுவாமிமலை கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா பத்து நாள்களுக்கு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், வள்ளி, தெய்வானையுடன் சண்முக சுவாமி சிறப்பு மலா் அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினாா். இவா்களுடன் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினா். கொடி மரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

Advertisement

தொடா்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆா்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. தைப்பூச நாளான பிப்ரவரி 4 ஆம் தேதி பகல் 11 மணியளவில் காவிரியில் தீா்த்தவாரி நடைபெறவுள்ளது. பின்னா் இரவு கொடியிறக்கம் செய்யப்பட்டு, 5 ஆம் தேதி மலைக்கோயிலுக்கு சுவாமி திரும்புகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.