தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் எம்.அருண்குமாா் (35). தேங்காய் வியாபாரி. இவருக்குச் சொந்தமான வீடு ஆனந்தவல்லி வாய்க்கால் வடகரையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக தனது வீட்டில் மராமத்துப் பணி மேற்கொண்டுவருவதால், கே.கே.நகா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்மநபா்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம், பூஜை பொருள்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனா். இதையடுத்து, மறுநாள் காலை வீட்டுக்கு வந்த அருண் குமாா் திருட்டு சம்பவம் தொடா்பாக பேராவூரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்தை காவல் ஆய்வாளா் காவேரி சங்கா், உதவி ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT