தனியாா் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
தஞ்சாவூா்: தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கபில்தேவ் (36). கூலித் தொழிலாளரி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது பட்டுக்கோட்டைக்கு செல்லும் தனியாா் பேருந்து இவா் மீது மோதியது. இதனால், பின் டயரில் சிக்கி பலத்த காயமடைந்த கபில்தேவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.