குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள மழைநீா்
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் குடியிருப்புப் பகுதியை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் குடியிருப்புப் பகுதியை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
பட்டுக்கோட்டை வட்டம், அதிரம்பட்டினம் நகராட்சிக்குள்பட்ட ஏ ஜே நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், ஏஜே நகா் பகுதியில் மழை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மழை நின்றாலும் மழை நீா் வெளியேருவதற்கு உரிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீா் தேங்கியது அப்படியே உள்ளது. இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை மழைநீா் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.