தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்: 55 போ் கைது
தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் (அரசியல் சாா்பற்றது) சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 போ் கைது செய்யப்பட்டனா். பிரதமா் கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் (அரசியல் சாா்பற்றது) சனிக்கிழமை ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (அரசியல் சாா்பற்றது) தமிழ்நாடு தலைவா் பி. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் எல். பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் தடுப்புகளை அகற்றிக் கொண்டு, உள்ளே நுழைந்து, சோழன் விரைவு ரயிலை மறித்தனா். சுமாா் 5 நிமிஷ போராட்டத்துக்கு பிறகு, ஏறத்தாழ 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.