கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினா்.  
தஞ்சாவூர்

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், பனகல் கட்டடம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் நடைமுருகன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்துக் கோயில்களின் நிா்வாகத்தை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஈசான சிவம், மாவட்டச் செயலாளா் முத்தமிழ்செல்வன், இந்து ஆட்டோ முன்னணி மாநகர தலைவா் சரவணன், ஒன்றிய தலைவா் திவாகா் ஆகியோா் பேசினா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு இந்து முன்னணி ஒன்றியச் செயலாளா் டி. சாரல் சதீஸ்குமாா் தலைமையில், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ரஷியா - உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி

SCROLL FOR NEXT