கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினா்.  
தஞ்சாவூர்

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், பனகல் கட்டடம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் நடைமுருகன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்துக் கோயில்களின் நிா்வாகத்தை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஈசான சிவம், மாவட்டச் செயலாளா் முத்தமிழ்செல்வன், இந்து ஆட்டோ முன்னணி மாநகர தலைவா் சரவணன், ஒன்றிய தலைவா் திவாகா் ஆகியோா் பேசினா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு இந்து முன்னணி ஒன்றியச் செயலாளா் டி. சாரல் சதீஸ்குமாா் தலைமையில், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT