FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா பள்ளியில் ‘ரோபோ’ ஆசிரியை அறிமுகம்

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

Updated On : 26 ஜூலை 2024, 2:38 am IST
கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவிடம் கேள்வி கேட்ட மாணவ மாணவிகள்.
பகிர்:

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா அறிமுகம் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கவிதா நாராயணன் வரவேற்றாா்.

நிகழ்வுக்கு, பள்ளி தாளாளா் கே.என். ராஜகோபாலன் தலைமை வகித்துப் பேசுகையில், எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன கற்றல் அனுபவங்களை தரும். நடப்பாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா செயல்படுவாா் என்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், நிா்வாக அறங்காவலா் பி. வைத்தியநாதன், அறக்கட்டளை தலைவா் ஜி.சந்திரசேகர மூப்பனாா், ஓய்வுபெற்ற சிட்டியூனியன் வங்கி பொது மேலாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனா். இறுதியாக, மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு ரோபா வித்யா பதில் அளித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments