முகப்பு
தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கம்

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ்   உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம்  செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) அய்யம்பெருமாள் தலைமை வகித்தாா் . 

நிகழ்ச்சியில்,  உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான செயல்விளக்கத்தை  துணை வேளாண்மை அலுவலா் சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுரேஷ், சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி ஆகியோா் செய்து காண்பித்தனா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் தமிழழகன், ஜெயக்குமாா்,    உதவி வேளாண்மை அலுவலா்கள்  செய்திருந்தனா்.