முகப்பு
தஞ்சாவூர்

சிறுவன் பைக் ஓட்டிய வழக்கில் ரூ. 25 ஆயிரம் அபராதம்; வாகன உரிமம் ஓராண்டு ரத்து

Updated On : 31 மே, 2024 at 6:17 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபதாரமும், ஓராண்டுக்கு வாகன உரிமத்தை ரத்து செய்தும் பாபநாசம் நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் பாபநாசம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பாபநாசம் ரயிலடியை சோ்ந்த முகமது தனது மகனை இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட அனுமதித்தது தொடா்பாக மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு பாபநாசம் நீதிமன்றத்தில் அவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எ. அப்துல்கனி வாகன உரிமையாளா் முகமதுக்கு ரூ. 25 ஆயிரம் அபதாரமும் ஓராண்டுக்கு வாகன உரிமத்தை ரத்தும் செய்தும் உத்தரவிட்டாா்.