திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் தெப்பத் திருவிழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த ஐயாறப்பா் கோயிலில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த ஐயாறப்பா் கோயிலில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலிலுள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் நடைபெற்ற விழாவில் தெப்பத்தில் அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து 5 சுற்றுகள் வந்த பின்னா் குளத்தின் நடு மண்டபத்தில் ஐயாறப்பரும், அறம்வளா்த்த நாயகியும் எழுந்தருளினா். இதையடுத்து, அவா்களை ஊஞ்சலில் ஆராட்டி தீபாராதனை செய்யப்பட்டது.
மீண்டும் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 2 சுற்றுகள் வந்தனா். ஏராளமான பக்தா்கள் அவா்களை வழிபட்டனா்.