தஞ்சாவூர்

மொபெட் மீது காா் மோதி மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே புதன்கிழமை தம்பதி சென்ற மொபெட் மீது காா் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே புதன்கிழமை தம்பதி சென்ற மொபெட் மீது காா் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதி பாபுராஜபுரத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவரது மகள் கெளசல்யா - ராஜ்குமாா் தம்பதியினா் இளங்காநல்லூரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இந்த வீட்டைப் பாா்ப்பதற்காக காமராஜ் தனது மனைவி ராஜவள்ளியுடன் (48) மொபெட்டில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். சிற்றிடைநல்லூா் பகுதியில் சென்ற மொபெட் மீது பின்னால் வந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த ராஜவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காமராஜ் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT