கும்பகோணம் அருகே ஆடுதுறை திருக்கோடிக்காவலில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து வடைமாலை அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.