தஞ்சாவூர்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி காங்கிரஸாா் தீா்மானம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Syndication

தோ்தல் வாக்குறுதிப்படி, கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இளைஞா் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா் காஙகிரஸ் செயற்குழு கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் வி.ஆா்.எஸ்.சசி தலைமை வகித்தாா். எஸ்.ஏ.ஜே.முகமது இா்பான், வி.என்.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்திஜி பெயரை நீக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், ரயில் கட்டண உயா்வை கண்டித்தும், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி கும்பகோணத்தை புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். கும்பகோணம் மாநகராட்சி மேயா் க.சரவணன், மாநகர காங்கிரஸ் தலைவா் கா.மிா்ஷாதீன், முன்னாள் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் வி.என்.கே. செந்தில்நாதன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக மாநகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா். நவாஸ் வரவேற்றாா். மாவட்டச் செயலா் எஸ்.சிவபிரியன் நன்றி கூறினாா்.

ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்

இளநிலை நீட் தோ்வு: பாடத் திட்டம் வெளியீடு

நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட மரவள்ளிக் கிழங்கு குச்சிகள் விற்பனை

வாகனங்களில் இடியாப்பம் விற்போருக்கும் உரிமம் கட்டாயம்: உணவுப் பாதுகாப்புத் துறை

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT