சிறுமி குறித்து அவதூறு: ‘போக்சோ’வில் இளைஞா் கைது
‘போக்சோ’வில் இளைஞா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ராகுல்காந்தி (22). இவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, தனது கைப்பேசியில் அவரை புகைப்படம் எடுத்தாா். இப்புகைப்படத்தை ராகுல்காந்தி சமூக வலைதளத்தில் அச்சிறுமி குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக பதிவேற்றம் செய்து, பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகுல்காந்தியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.