சேதுபாவாசத்திரம் அருகே சரக்கு லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சின்ன ஆவுடையாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர வடிவேல் (24). இவருக்குத் திருமணமாகி கௌசல்யா (20) என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனா். சுந்தரவடிவேல் செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடைவீதிக்கு சென்றுவிட்டு பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து மீன்கள் ஏற்றி வந்த சரக்கு லாரி மோதியதில் சுந்தரவடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கௌசல்யா அளித்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.