முகப்பு
தஞ்சாவூர்

தீவைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு: கணவா் கைது

பாபநாசம் அருகே டீசல் ஊற்றி கொளுத்தப்பட்ட மனைவி இறந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:33 AM
கைது
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 6:05 PM

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே  டீசல் ஊற்றி கொளுத்தப்பட்ட மனைவி இறந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் கீழகஞ்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (40), இவருடைய மனைவி வினோதினி (34), இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்த வினோதினி பாபநாசத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு, கபிஸ்தலம் கடைவீதி டீக்கடையில் வேலை பாா்த்தாா்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு டீக்கடை வேலையை முடித்த வினோதினி கும்பகோணம் - திருவையாறு நெடுஞ்சாலையில் நடந்து  சென்றபோதுஅங்கு வந்த கணவா் ராஜ்குமாா் அவரை வழிமறித்து  கேனில் இருந்த டீசலை அவா் மீது ஊற்றித் தீவைத்ததில் அவா் கடுகாயமடைந்தாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைத்து, ராஜ்குமாரை தாக்கினா். இதையடுத்து தம்பதியினா் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டனா்.

Advertisement

இவா்களில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து  கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ராஜ்குமாரை கைது செய்து விசாரிக்கிறாா்.