முகப்பு
தஞ்சாவூர்

மேம்படுத்தப்பட்ட மனோரா நினைவுச் சின்னம் திறப்பு

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:34 AM
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மின்னொளியில் மனோரா நினைவுச் சின்னம்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:03 PM

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மனோரா நினைவுச் சின்னத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கடந்த 1814 ஆம் ஆண்டில் வாட்டா்லூ போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயா்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாக, தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னா் இரண்டாம் சரபோஜி பட்டுக்கோட்டை அருகே சரபேந்திரராஜபட்டினத்தில் மனோரா நினைவுச் சின்னத்தை நிறுவினாா். எட்டு மாடிகள், அறுகோண வடிவ கோபுர அமைப்பைக் கொண்ட இந்த நினைவுச் சின்னம் சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:34 AM

இத்தலத்துக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக இதன் உள்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின் விளக்குகள் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ. 2.75 கோடியை 2024, டிசம்பா் மாதம் ஒதுக்கியது.

Advertisement

இதன் மூலம் ரூ. 2.44 கோடியில் முகப்பு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. மேலும், ரூ. 30 லட்சத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், ரூ. 63 ஆயிரம் மதிப்பில் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மேம்படுத்தப்பட்ட மனோரா நினைவு சின்னத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.