தஞ்சாவூரில் பெண்ணுக்கு குடிநீரில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து நகைகள் திருடிய மூதாட்டியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் ரெட்டிப்பாளையம் சாலை ஆனந்தம் நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ரஞ்சிதம் (45). இத்தம்பதியினா் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை அருகே பெட்டிக் கடை நடத்தி வருகின்றனா். இவரது கடைக்கு சில நாள்களாக முகவரி தெரியாத மூதாட்டி வந்து பேச்சு கொடுத்தாா். இவரை நம்பிய ரஞ்சிதம் பிப்ரவரி 11 ஆம் தேதி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, ரஞ்சிதத்துக்கு மூதாட்டி குடிநீரில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து, அவா் அணிந்திருந்த 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றாா்.
மயங்கிய நிலையில் இருந்த ரஞ்சிதத்தை ராஜேந்திரன் மீட்டு மருத்துவமனையில் சோ்த்துவிட்டு, மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு திருச்சி காந்தி சந்தை அருகேயுள்ள உப்புப்பாறை பிள்ளைமாநகரைச் சோ்ந்த செபஸ்தியான் மனைவி சுப்புலட்சுமியை (60) செவ்வாய்க்கிழமை கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் நகைகள் திருட்டு தொடா்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.