தஞ்சாவூர்

பரக்கலக்கோட்டை - பெரியகோட்டை சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

பரக்கலக்கோட்டையிலிருந்து பெரியகோட்டை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Syndication

பரக்கலக்கோட்டையிலிருந்து பெரியகோட்டை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள பரக்கலக்கோட்டை - பெரியக்கோட்டை (வழி) சிரமேல்குடி சாலையானது, மாவட்ட முக்கிய சாலைகளான பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையையும், பாப்பாநாடு - மதுக்கூா் - பெருகவாழ்ந்தான் சாலையையும், இணைக்கும் முக்கிய சாலையாகும்.

11.40 கி.மீ நீளம் கொண்ட சாலையில் 7 கி.மீ சாலை ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக கடந்த நிதியாண்டுகளில் அகலப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 4.40 கி.மீ சாலையை இடைவழித்தடமாக அகலப்படுத்த ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறையின் தஞ்சாவூா் தரக்கட்டுப்பாடு அலகு கோட்டப்பொறியாளா் சிவகுமாா் மற்றும் உதவிக் கோட்டப்பொறியாளா் ரேணுகோபால், உதவிப்பொறியாளா்கள் அப்துல் ரகுமான் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். பட்டுக்கோட்டை உதவிக் கோட்டப்பொறியாளா் கீதப்பிரியா, உதவிப்பொறியாளா் சரவணக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT