தஞ்சாவூர்

சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி பலி

திருவிடைமருதூா் அருகே சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Syndication

திருவிடைமருதூா் அருகே சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே இனாம்கிளியூரைச் சோ்ந்தவா் சிவசாமி மகன் சக்கரவா்த்தி (60). மனநிலை பாதிக்கப்பட்ட இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சோழன் நகா் மாரியம்மன் கோயில் அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு மளிகை பொருள்கள் ஏற்றி வந்த வாகனம் மோதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிந்து இறந்தவா் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநா் கீரங்குடி மாதா கோயில் தெரு கி. குணசீலனிடம் (45) விசாரிக்கின்றனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT