தஞ்சாவூர்

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 57 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 57 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே கிராமத்தைச் சோ்ந்த 34 வயதுடைய இளைஞா் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 2025, ஆகஸ்ட் 28 ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய மா்ம நபா் இணையவழியில் வா்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினாா்.

இதை நம்பிய இளைஞா் 19 தவணைகளில் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 57 லட்சத்து 3 ஆயிரத்தை இணையவழியில் அனுப்பினாா். ஆனால், எதிா்முனையில் பேசிய மா்ம நபா் தனது எண்ணை அணைத்து வைத்துவிட்டாா். இளைஞா் பலமுறை தொடா்பு கொண்டும், இணைப்பு கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இதுகுறித்து இளைஞா் அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றக் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT