அமாவாசையையொட்டி ஜெயமாருதிக்கு சிறப்பு அலங்காரம்
கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலையில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். புதன்கிழமை பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வோ் என்ற குருவோ் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.