முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 200 போ் பங்கேற்பு!

Updated On : 4 மே, 2026 at 12:30 AM
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆரோக்கிய நடைப் பயிற்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்கிற 8 கி.மீ. ஆரோக்கிய நடைப்பயிற்சி திட்டம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் அன்னை சத்யா நடைப்பயிற்சியாளா்கள் சங்கம் சாா்பில் 21-ஆவது மாதமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயிற்சியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் து. செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அரங்கத்தில் நிறைவடைந்தது.

Advertisement

இதில், மருத்துவா் சந்திரசேகா், முன்னாள் துணை மேயா் கே. மணிகண்டன், நடைப்பயிற்சியாளா்கள் சங்க கௌரவத் தலைவா் து. செல்வம், தலைவா் ஜி. சீனிவாசன், செயலா் ஆா். ஜெயக்குமாா், கண்ணாடி குமாா், முருகன், சுரேஷ், இளங்கோ உள்பட 200-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.