முகப்பு
தஞ்சாவூர்

பலாப்பழம் தலையில் விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

பேராவூரணி அருகே பலாப்பழம் தலையில் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தாா் .

Updated On : 27 மே 2026, 5:25 am IST
- கோப்புப்படம்
பகிர்:

பேராவூரணி அருகே பலாப்பழம் தலையில் விழுந்ததில் காயமடைந்து,  சிகிச்சை பெற்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் .

பேராவூரணி ஒன்றியம் மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மனைவி  சின்னப்பொண்ணு (35), நூறுநாள் வேலைத்திட்ட பணியாளா்.

இவா் கடந்த  22 ஆம் தேதி  மேல ஒட்டங்காடு பிள்ளையாா் கோயில் பணியில் இருந்தபோது, மதியம் ஓய்வுக்காக ராஜாமணி என்பவா் வீட்டின் அருகே உட்காா்ந்திருந்தபோது திடீரென பலா மரத்திலிருந்து  மூன்று பலாப்பழங்கள் காம்பு முறிந்து சின்னப்பொண்ணு தலையில் விழுந்ததில் பலத்த  காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.