திருச்சி

பெல் நிறுவனத்துக்கு 3ஆவது முறையாக பாதுகாப்பு புதுமைப் புனைவு விருது

DIN

இந்தியப் பொறியாளர்கள் கழகம் வழங்கும் பாதுகாப்பு புதுமை புனைவுக்கான விருதை திருச்சி பெல் நிறுவனம் தொடர்ந்து 3-ஆவது முறையாக வென்றுள்ளது.
புதுதில்லியில் செப். 6-ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்பிற்கான பன்னாட்டுக் கருத்தரங்கில், தில்லி மாநில அரசின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி மெட்ரோ ரயில் கழக மேலாண்மை இயக்குநர் மங்குசிங் ஆகியோர் முன்னிலையில் பெல் நிறுவனத்தின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான கூடுதல் பொது மேலாளர் டி. பாஸ்கரன் மேற்கண்ட விருதைப் பெற்றுக்கொண்டார். பாதுகாப்பில் புதுமைகளைப் புகுத்தி, உன்னதத்தை எட்டிடும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை திருச்சி பெல் நிறுவனம் தொடர்ந்து 3-ஆவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதில் ஒரு பட்டயமும், சான்றிதழும் அடங்கும்.
நாட்டின் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுள், பாதுகாப்பில் பல்வேறு வழிகளில் புதுமையான முறைகளைக் கையாளுதல், ஊழியர்களிடையே பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்காணித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT