திருச்சி

உலக  பாரம்பரிய தினத்தையொட்டி ரயில்வே அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட்ட மக்கள்

DIN

உலக பாரம்பரிய தினத்தையொட்டி திருச்சி ரயில்வே அருங்காட்சியகத்தை புதன்கிழமை இலவசமாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஆர்.  ஆய்வு தலைமை வகித்தார். திருச்சியில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் வந்தனர். 
அருங்காட்சியகத்தை புதன்கிழமை பார்வையிட்ட பொதுமக்கள் விளையாட்டு ரயிலில் பயணித்தனர். மேலும், அங்குள்ள விளையாட்டுச் சாதனங்களிலும் கட்டணமின்றி விளையாட அனுமதிக்கப்பட்டனர்.  அருங்காட்சியகத்தில் உள்ள 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடிகாரம், முந்தைய காலங்களில் ரயில்வே துறையில் பயன்படுத்திய தண்டவாளம், சிக்னல் விளக்கு, ரயில்வே கேட் பூட்டு சாவிகள், மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் மற்றும் ரயில் , ரயில் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து  மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT