திருச்சி

பேருந்து மோதி முதியவர் சாவு

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பேருந்து மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தொட்டியம் அருகிலுள்ள மகேந்திரமங்கலம் சன்னாசிமடத்தைச் சேர்ந்தவர் நீ. தங்கராசு (78). இவர் செவ்வாய்க்கிழமை காலை காவிரியாற்றுக்குச் சென்று விட்டு வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போதுஅந்த வழியாக வந்த தனியார் பேருந்து தங்கராசு மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து தொட்டியம் போலீஸார்  வழக்குப்பதிந்து,  லால்குடி வட்டம், பூவாலூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சே. ரமேஷை (42) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT