சாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
துறையூரில் சாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
துறையூரில் சாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன அலுவலர் ஏ. செல்வகுமார் தொடக்கி வைத்தார். துறையூர் அருகே வடக்குவெளி மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ. செல்வகுமார், துறையூர் காவல் ஆய்வாளர் எல். மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோவையைச் சேர்ந்த கதிரேசன் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், பேருந்து நிலையம், வித்யா மந்திர் பள்ளி ஆகிய இடங்களில் சாலை விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.