முகப்பு
திருச்சி

முக்கொம்பு அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன்  மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.

Updated On : 21 மே, 2018 at 7:35 AM
பகிர்:

கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன்  மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.
கோடை விடுமுறையையொட்டி இவரும், இவரது சகோதரர் கார்த்திக்கும் (15)   திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள சித்தி வீட்டுக்கு கடந்த வாரம் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை பகல், சித்தி மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து 3 பேரும்,  காவிரியாற்றில் உள்ள முக்கொம்பு அணைக்குச் சென்றனர்.  
மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற வெங்கடேசன் மூழ்கினார்.  இதையடுத்து அங்கிருந்தோர் வெங்கடேசனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.