முக்கொம்பு அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன் மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.
கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன் மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.
கோடை விடுமுறையையொட்டி இவரும், இவரது சகோதரர் கார்த்திக்கும் (15) திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள சித்தி வீட்டுக்கு கடந்த வாரம் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை பகல், சித்தி மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து 3 பேரும், காவிரியாற்றில் உள்ள முக்கொம்பு அணைக்குச் சென்றனர்.
மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற வெங்கடேசன் மூழ்கினார். இதையடுத்து அங்கிருந்தோர் வெங்கடேசனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.