திருச்சி

விஷம் குடித்து மயங்கி விழுந்த பேருந்து நடத்துநர்

DIN

அரசுப் பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருச்சி, காந்திச்சந்தை அருகேயுள்ள தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் (42).  இவர் துவாக்குடி அரசுப் பேருந்து பணிமனையின் கீழ் 
இயக்கப்படும் நகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து திருவெறும்பூர் அருகேயுள்ள  வ.உ.சி., நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோபிநாதன் திடீரென வாயில் நுரைதள்ளியபடி மயங்கி பேருந்திலேயே விழுந்தார். 
இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT