திருச்சி

மணப்பாறையில் தீத்தொண்டு நாள் வார விழா

DIN


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து தடுப்பு குறித்து சனிக்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணப்பாறையில் கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை மணப்பாறை நிலைய அதிகாரி கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மணப்பாறை பேருந்துநிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தீ விபத்து தடுப்பு குறித்து பேருந்துநிலையத்தில் இருந்த பொதுமக்கள், வணிக நிறுவன பணியாளர்கள், பேருந்து பயணிகள் ஆகியோருக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT