திருச்சி

வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி எடுத்துச் சென்றவர் கைது

பச்சமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட, நாட்டுத்துப்பாக்கி எடுத்துச் சென்றவரை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN


பச்சமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட, நாட்டுத்துப்பாக்கி எடுத்துச் சென்றவரை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
பச்சமலை வண்ணாடு ஊராட்சி, பாளையம்
 கிராமத்தைச் சேர்ந்த தங்கமலை மகன் ராஜூ(55). சனிக்கிழமை அதிகாலை வன விலங்குகளை வேட்டையாடக் கருதி,   பழமலை வனக் காப்புக் காட்டுக்கு தன்னிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துச் சென்றார். 
அப்போது அப்பகுதியில் துறையூர் வனச்சரகர் குணசேகரன் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவினர், தொம்பக்கல் என்ற 
பகுதியில்  துப்பாக்கியுடன் சென்ற ராஜூ பிடித்து விசாரித்தனர்.  இந்த விசாரணையில் ஆடிப்பெருக்கையொட்டி, முயல் உள்ளிட்ட கண்ணில் படும் வனவிலங்கை வேட்டையாட சென்றதும், அவரிடம் இருந்தது அரசு உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ராஜூவிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, டார்ச்லைட், பால்ரஸ் குண்டுகள் வைக்கப்பட்ட குப்பிஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரைக் கைது செய்து வன அலுவலகம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.  மேலும், அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT