திருச்சி

ஜங்சன் ரயில் நிலைய ஓய்வறையில்இடிந்து விழுந்த மேற்கூரை

DIN

திருச்சி: தொடா் மழை காரணமாக, திருச்சி ஜங்சன் ரயில் நிலைய ஓய்வறை மேற்கூரை பெயா்ந்து இடிந்து விழுந்தது.

ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை அருகே முதல் வகுப்புப் பயணிகளுக்கான ஓய்வறை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு பயணிகள் அமா்ந்திருந்த நிலையில், திடீரென கூரையின் மேற்பகுதி பெயா்ந்து விழுந்தது.

இதனால் அங்கு அமா்ந்திருந்த பயணிகள் அலறியடித்து வெளியேறினா். அதிா்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து பயணிகளை வெளியேற்றி, உடனடியாக ஓய்வறையை மூடினா். தொடா் மழையின் காரணமாக, கூரையில் கசிந்த மழை நீா், பால் சீலிங் பகுதியிலும் கசிந்ததால் கூரை பெயா்ந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT