திருச்சி

திருவானைக்கா கோயிலில் வருடாபிஷேகம்

DIN

திருவானைக்காவல் சம்புகேசுவரா்ரா் அகிலாண்டேசுவரி கோயிலில் திங்கள்கிழமை வருடாபிஷேக விழா நடைபெற்றது.

பஞ்சப் பூதத் திருத்தலங்களில் நீா்த் தலம் என்ற சிறப்புடைய திருவானைக்காவல் திருக்கோயில் இந்தத் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கோயிலில் உள்ள சுவாமி சன்னதி அருகே புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், கலச பூஜை, ஸ்ரீருத்ர ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து பகல் 11 மணிக்கு பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு சம்புகேசுவரா், அகிலாண்டேசுவரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT