திருச்சி

பொங்கல் பண்டிகையையொட்டி  காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே ஜன.14 முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி முதல், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.
இது குறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொங்கல் திருநாளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரயில் போக்குவரத்து ஜனவரி 14 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
வார நாள்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் இந்த ரயில்(எண். 06856), காலை 9.45-க்கு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு கண்டனூர் புதுவயல், பெரியக்கோட்டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயிங்குடி, பேராவூரணி, ஒட்டாங்காடு ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பகல் 12.30-க்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடையும். எதிர் மார்க்கத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து பகல் 1.30-க்கு புறப்படும் ரயில் (எண். 06855) பிற்பகல் 4.20-க்கு மீண்டும் காரைக்குடியை சென்றடையும்.  ஜூலை  4 ஆம் தேதி வரை இந்த பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT