திருச்சி

கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

DIN

திருச்சி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி திருவரங்கம்(39) . இவர், செவ்வாய்க்கிழமை தனது அக்கா மகள் காத்தலட்சுமியுடன் பழூர் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றார். அங்கு இருவரும் மந்தை அருகே நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பழூர் கொடியாலம் பகுதியைச் சேர்ந்த முரளி(27) காத்தலட்சுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியுள்ளார்.  இதைக் கண்ட திருவரங்கம் மற்றும் அவரது உறவினரான  ஜெய்விக்ணேஷ்(21) உள்ளிட்ட சிலர் முரளியிடம் கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது முரளி தரப்பைச் சேர்ந்த உத்தமராஜ்(23) தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெய்விக்னேஷை வெட்டினார். இதில் ஜெய்விக்னேஷூக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீஸார் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஜெய்விக்னேஷை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து  ஜீயபுரம் போலீஸார்  வழக்குப் பதிந்து பழூரைச் சேர்ந்த முரளி, பிரியங்கா(19), உத்தமராஜ்(23), தர்மா(22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT