திருச்சி

ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

DIN

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கல்லூரியில் 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. 
இக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம்  ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கியது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க மே 3 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி கல்லூரி கலையரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பிகாம் பட்டபடிப்பில் சேர்வதற்கு  விண்ணப்பித்திருந்த 1,505 மாணவர்களிடம் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 7) பிஎஸ்சி அறிவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT