திருச்சி

திருச்சியில் ரூ.5.83 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது  பயணி ஷேக்மைதீன் (37) உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர் தனது உடைமைக்குள் 240 கிராம்  எடையுள்ள ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, ஷேக் மைதீனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT