திருச்சி

கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழப்பு

DIN

திருச்சி கருமண்டபம் பகுதியில் கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழந்தது.

கருமண்டபம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லுசாமி. இவரது மனைவி நித்யா (26). இவா்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், நித்யா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள பொது கழிவறைக்கு நித்யா சென்ற போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பெண் குழந்தை பிறந்தது.

குறை மாதத்தில் பிறந்ததால் சிசு மூச்சுவிடத் திணறியது. இதையடுத்து தாயும், சிசுவும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிறிது நேரத்தில் சிசு உயிரிழந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT