திருச்சி

கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழப்பு

திருச்சி கருமண்டபம் பகுதியில் கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழந்தது.

DIN

திருச்சி கருமண்டபம் பகுதியில் கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழந்தது.

கருமண்டபம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லுசாமி. இவரது மனைவி நித்யா (26). இவா்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், நித்யா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள பொது கழிவறைக்கு நித்யா சென்ற போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பெண் குழந்தை பிறந்தது.

குறை மாதத்தில் பிறந்ததால் சிசு மூச்சுவிடத் திணறியது. இதையடுத்து தாயும், சிசுவும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிறிது நேரத்தில் சிசு உயிரிழந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT