திருச்சி

காணாமல் போன இரு மாணவர்கள் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சங்கிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், பூக்கடைகாரர். தற்போது மணப்பாறையில் வசிக்கிறார்

DIN


திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சங்கிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், பூக்கடைகாரர். தற்போது மணப்பாறையில் வசிக்கிறார். இவரது மகன் சிவசாமி, கோவில்பட்டி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர். இவரது சக மாணவர் அண்ணாவிநகர் வேல்முருகன் மகன் சஞ்சய்.  நண்பர்களான இருவரும் சரியாக படிப்பதில்லை என பெற்றோர் வீட்டில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை.  சக மாணவர்களை விசாரித்தபோது  இருவரையும் பழனி செல்லும் பேருந்தில் பார்த்ததாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். 
இந்நிலையில் சனிக்கிழமை காலை பழனிக்கு சென்று விட்டு திண்டுக்கல் வந்த மாணவர்களை திண்டுக்கல் போலீஸார் மீட்டு, மணப்பாறை போலீஸார் உதவியுடன் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT