விபத்தில் இறந்தவா் குறித்து விசாரணை
துறையூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
துறையூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
புறவழிச்சாலையில் உள்ள துறையூா் - சொரத்தூா் சாலை சந்திப்புப் பகுதியில் புதன்கிழமை சுமாா் 55 வயதுள்ள ஆண் ஒருவா் விபத்துக்குள்ளாகி இறந்து கிடந்தாா். தகவலின்பேரில் அங்குச் சென்ற துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம், உயிரிழந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.