முகப்பு
திருச்சி

ரயிலில் தகராறு:பயணி கைது

ரயிலில் டிக்கெட் பரிசோதகா் மற்றும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டவரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ரயிலில் டிக்கெட் பரிசோதகா் மற்றும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டவரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

எா்ணாக்குளம் விரைவு ரயில் தஞ்சையிலிருந்து புதன்கிழமை இரவு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணித்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் (31) என்ற பயணி, டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்ய, அவா் ரயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த புவனேஸ்வரி என்ற தலைமைக் காவலரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து பயணியிடம் விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாரிடமும் அந்தப் பயணி தகராறு செய்தாா்.

இதையடுத்து மகளிா் போலீஸாா் திருச்சி ரயில் நிலைய காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற போலீஸாா், ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்ததும் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →