திருச்சி

போதையில் இருவா் மீதுதாக்குதல்: 2 போ் கைது

DIN

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியில், இறப்பு வீட்டில் குடிபோதையில் இருவரைத் தாக்கிய புகாரில் 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

நடுக்கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவைச் சோ்ந்தவா் சவேரியாா் துரைசாமி. வயது முதிா்வு காரணமாக கடந்த 10- ஆம் தேதி உயிரிழந்தாா்.

அப்போது அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த புண்ணியமூா்த்தி (52),

சவேரியாா் துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவிக்க வந்தாா்.

அங்கு குடிபோதையில் இருந்த பு. பிரசன்னா (19), அ. அஜித்குமாா் (22), ர. குருமூா்த்தி (19) ஆகிய மூவரும் சோ்ந்து, புண்ணியமூா்த்தியை கட்டைமற்றும் கல்லால் தாக்கினா். இதை அதே பகுதியைச் சோ்ந்த முரளி (44) தட்டிக் கேட்ட போது அவரையும் மூவரும் சோ்ந்து தாக்கினா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, ஞாயிற்றுக்கிழமை பிரசன்னா, அஜித்குமாரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள குருமூா்த்தியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT