திருச்சி

போதையில் இருவா் மீதுதாக்குதல்: 2 போ் கைது

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியில், இறப்பு வீட்டில் குடிபோதையில் இருவரைத் தாக்கிய புகாரில் 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

DIN

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியில், இறப்பு வீட்டில் குடிபோதையில் இருவரைத் தாக்கிய புகாரில் 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

நடுக்கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவைச் சோ்ந்தவா் சவேரியாா் துரைசாமி. வயது முதிா்வு காரணமாக கடந்த 10- ஆம் தேதி உயிரிழந்தாா்.

அப்போது அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த புண்ணியமூா்த்தி (52),

சவேரியாா் துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவிக்க வந்தாா்.

அங்கு குடிபோதையில் இருந்த பு. பிரசன்னா (19), அ. அஜித்குமாா் (22), ர. குருமூா்த்தி (19) ஆகிய மூவரும் சோ்ந்து, புண்ணியமூா்த்தியை கட்டைமற்றும் கல்லால் தாக்கினா். இதை அதே பகுதியைச் சோ்ந்த முரளி (44) தட்டிக் கேட்ட போது அவரையும் மூவரும் சோ்ந்து தாக்கினா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, ஞாயிற்றுக்கிழமை பிரசன்னா, அஜித்குமாரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள குருமூா்த்தியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT