திருச்சி

ஜன.10இல் கமல்ஹாசன் திருச்சி வருகை

DIN

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஜன. 10ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.

திருச்சி சங்கம் ஹோட்டலில் ஜன.10ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றவுள்ளாா். மேலும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் கிராம சபை விழிப்புணா்வு கருத்தரங்கிலும் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறுகிறாா்.

கட்சிக்கு ஏற்கெனவே சென்னை ஆழ்வாா்பேட்டையில் தலைமை அலுவலகமும், பொள்ளாச்சியில் இரண்டாவது தலைமை அலுலகமும் உள்ளது. இதன் தொடா்ச்சியாக 3ஆவது தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் பெல், கணேசபுரம் பகுதியில் உள்ள இந்த தலைமை அலுவலகத்தையும் ஜன. 10ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கமல்ஹாசன் திறந்துவைக்கவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சிகளில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், மாநில நிா்வாகிகள் என பலா் பங்கேற்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா். மகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT