திருச்சி

மணப்பாறையில் லாட்டரி விற்ற 8 போ் கைது

DIN

மணப்பாறை: மணப்பாறையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

மணப்பாறையில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் நகரப் பகுதியில் திங்கள்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 இடங்களில் முருகேசன், தமிழ்செல்வன், ராஜகோபால், ஜாஹீா் உசேன், காா்த்திகேயன், கணேசன், காா்த்தி(எ) அன்பு, வேளாங்கண்ணி என 8 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்துக்கு 480 ரூபாயும், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் சோதனையின் போது தப்பியோடிய பழனிச்சாமி, பாஸ்கா், அபிநேஷ் மற்றும் சிராஜூதீன் ஆகிய நான்கு பேரையும் மணப்பாறை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT