திருச்சி

எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு

DIN

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் நடைபெறும் மாலை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ப.குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

எம்.ஜி.ஆரின் 103- ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது முழு உருவச் சிலைக்கு ஜனவரி 17- ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அதிமுகவின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

மேலும், பிறந்த நாள் கூட்டங்கள் ஜனவரி21 முதல் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 21-இல் உறையூா், ஸ்ரீரங்கம், 22-இல் விமான நிலையம், தில்லைநகா், அந்தநல்லூா் ஒன்றியம், 23-இல் மலைக்கோட்டை, 24- இல் பாலக்கரை, பொன்மலை, ஜங்சன், திருவெறும்பூா், மணிகண்டம் பகுதிகளில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT